VJ Kalyani: தூக்கில் தொங்கிய அம்மா.. உயிரை முடித்து கொள்ள தயாரான கல்யாணி
தொகுப்பாளினி கல்யாணி தன் தாய் மரணம் குறித்து பேட்டி அளித்தார்.

தொகுப்பாளினி கல்யாணி தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அவர் ஸ்டார் விஜய்யில் தமிழ் தொலைக்காட்சி தொடரான கனா காணும் காலங்கள் 2 இல் அறிமுகமானார்.
தாயுமானவன், ஆண்டாள் அழகர் போன்ற தொடர்களில் நடித்தார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிஸியாக இருந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு ரோஹித்தை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். இவருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
முன்னதாக அவர் தன் தாய் மரணம் குறித்து பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “24 டிசம்பர் 2014 அன்று நான் இரண்டு ஆன்மாக்களை இழந்தேன். மிகவும் சாதாரண நாளாகத் தொடங்கிய நாள். என் வாழ்வின் பயங்கரமான நாளாக மாறியது. நான் என் அம்மாவின் பக்கத்து அறையில் வசித்து வந்தேன். வழக்கம் போல் அம்மாவுடன் ஜிம்மிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தேன்.
அம்மாவின் அழைப்பு மணி அடித்தது, கதவைத் திறக்கும் போது அவள் முகத்தில் எப்போதும் காணும் மகிழ்ச்சி இல்லை. ஏதோ தவறாக இருந்தது. கொஞ்சம் எலுமிச்சம்பழம் ஜூஸ் செய்து கொடுத்துவிட்டு ரெடியாகு என்று சொல்லிவிட்டு ரெடியாக போனேன்.