கோடியில் சம்பளம் கேட்டேனா? - “எந்த நாய் வேணாலும்.. சாணி மேல கல் எறிஞ்சா நம்ம ” - பயில்வானை பதம் பார்த்த வெங்கடேஷ் பட்!
தயவுசெய்து அதுபோல திட்டி கமெண்ட்களை பதிவிட வேண்டாம். அவருடைய நிலைமை என்னவென்று தெரியவில்லை பாவம் அவர் பணத்திற்காக செய்கிறாரா, மனநிலை சரியில்லாமல் செய்கிறாரா தெரியவில்லை. - பயில்வானை பதம் பார்த்த வெங்கடேஷ் பட்!

கோடியில் சம்பளம் கேட்டேனா? - “எந்த நாய் வேணாலும்.. சாணி மேல கல் எறிஞ்சா நம்ம ” - பயில்வானை பதம் பார்த்த வெங்கடேஷ் பட்!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு அறிமுகமே தேவையில்லை. இந்த நிகழ்ச்சியில் நடுவராக கடந்த 4 சீசன்களாக நடுவராக இருந்தவர் வெங்கடேஷ் பட். இவர் 5 ஆவது சீசனில் தொடராமல், சன் டிவிக்குச் சென்று ‘டாப் குக்கு டூப் குக்கு' என்ற குக்கிங் நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தினார்.
இந்த இரு நிகழ்ச்சிகளும் அண்மையில் முடிவடைந்தன. இந்த நிலையில், பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், வெங்கடேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும், அதனை விஜய் டிவி ஒத்துக்கொள்ள காரணத்தால்தான், அவர் சன் டிவிக்கு சென்றார் என்றும் பேசி இருந்தார். இந்த நிலையில் அதற்கு வெங்கடேஷ் பட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார்.