ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி சம்பளம்..இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் பாடகர்! யார் இவர்?
பகுதி நேர பாடகராக இருந்தாலும், டாப் பின்னிணி பாடகர்களான அர்ஜித் சிங், ஷ்ரேயா கோஷல், சுனிதி செளரகான், சோனு நிகாம் ஆகியோரை காட்டிலும் அதிக சம்பளம் பெறுகிறார் இந்த பாடகர். ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி வாங்கும் இந்த பாடகர் யார் என்பதை பார்க்கலாம்.

இந்திய சினிமாவில் ஏராளமான பாடகர்கள் இருந்தாலும், சிலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கை பெற்றவர்களாக இருக்கிறார்கள். 1950களில் தொடங்கி தற்போது வரை ரசிகர்கள் மனதில் ரீங்காரமிடும் பாடகர்கள் பலர் இருந்தாலும், அவர்களில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார் என தகவல் புதிரான விஷயமாகவே இருந்து வருகிறது.
ஒரு சில பாடகர்கள் தங்களது சினிமா கேரியரில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார்கள். தங்களது தாய் மொழியை கடந்த பல்வேறு மொழிகளிலும் பாடல்களை பாடி புகழ் பெற்றவர்களாகவும் இருந்துள்ளார்கள். அந்த வகையில் பகுதி நேர பாடகராக இருக்கும் ஒருவர் ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.
இந்தியாவின் காஸ்ட்லியான பாடகர்
இந்திய சினிமாக்களை பாலிவுட், தென்னிந்தியா, போஜ்புரி என பல வகைகளில் பிரித்து பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மொழிகளிலும் சில பாடகர்கள் டாப் சிங்கராக இருந்து வருகிறார்கள். அத்துடன் ஒரு சில ஒட்டுமொத்த மொத்த இந்தியாவின் குரலாக ரசிக்கப்பட்டு வருகிறார்கள்.