Surya Jyothika:கீழடி அருங்காட்சியகத்தில்சூர்யா ஜோதிகா;வைரலாகும் புகைப்படங்கள்!
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா ஜோதிகா!
சிவகங்கை மாவட்டம் கீழடியில், பழங்காலத்தில் தமிழகர்கள் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. முன்னதாக இந்த அருங்காட்சியகம் இலவசமாக மக்கள் பார்வைக்கு விடப்பட்ட நிலையில், அண்மையில், அருங்காட்சியகத்தை பார்வையிட ( (01-04-2023) முதல் அதாவது இன்று முதல் கட்டணம் விதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
அதன் படி பெரியவர்களுக்கு – ரூ.15, சிறியவர்களுக்கு – ரூ.10, மாணவர்களுக்கு – ரூ.5 என கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் வெளிநாட்டில் இருந்து வந்து பார்வையிடும் பார்வையாளர்களில் பெரியவர்களுக்கு 50 ரூபாயும், சிறியவர்களுக்கு 25 ரூபாயும், புகைப்படம் எடுக்க 30 ரூபாயும், வீடியோ படம் எடுக்க 50 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பிரபல நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, குழந்தைகள், தன்னுடைய அப்பா சிவக்குமார் ஆகியோருடன் கீழடிக்குச் சென்று அருங்காட்சியகத்தை கட்டணம் செலுத்தி பார்வையிட்டார். இவர்களுடன் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் பங்கேற்றார்
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘சூர்யா 42’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் புரோமோ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகுமென தகவல் வெளியாகி இருக்கிறது.
டாபிக்ஸ்