தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal Serial: களத்தில் இறங்கிய ஜனனி.. எஸ்கேப்பான தர்ஷினி.. எதிர்நீச்சலில் பரபரப்பு!

Ethirneechal Serial: களத்தில் இறங்கிய ஜனனி.. எஸ்கேப்பான தர்ஷினி.. எதிர்நீச்சலில் பரபரப்பு!

Aarthi Balaji HT Tamil
Mar 05, 2024 12:33 PM IST

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ காட்சி ஒன்று வெளியா உள்ளது.

எதிர்நீச்சல்
எதிர்நீச்சல்

ட்ரெண்டிங் செய்திகள்

அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.

அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.

ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டிஆர்பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது.

இதனிடையே தற்போது எதிர்நீச்சல் சீரியலில், அந்த வீட்டு பெண் தர்ஷினியை யாரோ கடத்தி சென்றுவிட்டார்கள். அது தான் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ காட்சி ஒன்று வெளியா உள்ளது. தர்ஷினியை கடத்தி வைத்திருப்பவர்களிடமிருந்து அவர் தப்பித்து ஓடிவிடுகிறார்.

ஜனனி ஒரு வழியாக தர்ஷினியை அடைத்து வைத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். ஆனால் அங்கு தர்ஷினி இல்லை. தர்ஷினி தப்பித்து வரும் வழியில் பாறை ஒன்றில் மயக்க நிலையில் காணப்படுகின்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்