அனுஷ்காவே வியந்து பாராட்டிய சீரியல் நடிகை.. பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் அந்த நடிகை யார்?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தை ஏற்று, தற்போது தன் நடிப்பினால், தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருக்கும் நபர் தான் நடிகை பவித்ரா ஜனனி. தற்போது பிக்பாஸ் சீசன் 8 வீட்டிற்குள் செல்லும் இவரைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில், சீரியலுக்கு நடிக்க வருவோர் சினிமாவிற்கு இணையாக தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். அவ்வாறு தன்னை மெருகேற்றிக் கொள்பவர்களை ரசிகர்கள் சூழ்ந்து விடுகின்றனர். அப்படி தனக்கான ரசிகர் படையை திரட்டி வைத்திருப்பவர் தான் பவித்ரா ஜனனி. சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், அவ்வப்போது அவரது புகைப்படங்களை பதிவேற்றி வருவார். அதுமட்டுமின்றி, 30 வயதிற்கு மேலாகும் இவர், திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை எனவும் கூறி அவரது ரசிகர்களுக்கு ஷாக் அளித்துள்ளார்.
ஆபிஸ் நாடகத்தில் தொடங்கிய பயணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இந்த சீரியலில் சிறு கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து விஜய் டிவிக்குள் வந்தவர் தான் பவித்ரா ஜனனி. பின், சரவணன் மீனாட்சி நாடகத்திலும் நடித்தார். இவை இரண்டும் பெயர் சொல்லிக் கொள்ளும் அளவு பவித்ராவிற்கு வெளிச்சத்தை தரவில்லை. இந்நிலையில் தான், இவர் ஈரமான ரோஜாவே எனும் சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார்.
ஹிட் கொடுத்த ஈரமான ரோஜாவே
சூழ்நிலையின் காரணமாக, தான் காதலித்தவரின் சகோதரனையே திருமணம் செய்ய நேரிடும் ஒரு பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார் பவித்ரா ஜனனி. முதலில் இந்த நாடகத்திற்கு அதிக அளவு மக்களிடம் வரவேற்பு இல்லாத நிலையில், போகப்போக இதன் கதை மக்களை வெகுவாக இழுத்தது. கோவம், சோகம், ஏக்கம் என அனைத்தையும் கலந்து தன் நடிப்புத் திறனை இந்த நாடகத்தில் பதிவு செய்திருப்பார் பவித்ரா.