Sreeleela:'இந்தாங்க'- திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வெளியேவந்தபின் ரசிகருக்கு ஸ்ரீலீலா தந்த பிரசாதம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sreeleela:'இந்தாங்க'- திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வெளியேவந்தபின் ரசிகருக்கு ஸ்ரீலீலா தந்த பிரசாதம்!

Sreeleela:'இந்தாங்க'- திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வெளியேவந்தபின் ரசிகருக்கு ஸ்ரீலீலா தந்த பிரசாதம்!

Marimuthu M HT Tamil Published Feb 20, 2024 04:14 PM IST
Marimuthu M HT Tamil
Published Feb 20, 2024 04:14 PM IST

- திருப்பதியில் ஸ்ரீலீலா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்த நடிகை ஸ்ரீலீலா
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்த நடிகை ஸ்ரீலீலா (X)

நடிகை ஸ்ரீலீலா, தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருகிறார். நடிகர் மகேஷ் பாபுவுடன், ஸ்ரீலீலா இணைந்து நடித்த குண்டூர் காரம் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஹிட்டடித்தது. அதேபோல், இப்படத்தில் வரும் ‘குறிச்சி மாடத்துபெட்டி’ என்னும் பாடல், தெலுங்கு மொழியில் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஸ்ரீலீலாவின் நடன அசைவுகள் இளசுகளை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகை ஸ்ரீலீலா தனது குடும்பத்தினருடன் நேற்று(பிப்ரவரி 19) திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார். 

அந்த தரிசனத்தின்போது, நடிகை ஸ்ரீலீலா தாவணி அணிந்து, நெற்றியில் நாமம் சூடியிருந்தார்.

இதனிடையே  தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் ஒரு படத்தைப் பகிர்ந்த நடிகை ஸ்ரீலீலா, "திருப்பதியில் ஒரு அழகான தரிசனம். இது நமக்கு சில நேர்மறைப் பண்புகளை அனுப்புகிறது. கடவுள் நம்மை ஆசீர்வதிக்கட்டும்" என்று எழுதியுள்ளார். 

ரசிகர்கள் கூட்டம்:

ரசிகர் பகிர்ந்த வீடியோவில், ஸ்ரீலீலா, தரிசனத்திற்குச் செல்லும்போது ரசிகர்களிடம் பேசுகிறார். அவர் உள்ளே செல்வதற்கு முன்பு, ரசிகர்களுடன் சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.

வெளியே வந்த பிறகு, தனது ரசிகர் ஒருவருக்குத் தன் கையில் வைத்து இருக்கும் பிரசாதங்களைக் கொடுத்தார். அப்போது ரசிகர்கள் அவரை புகைப்படம் எடுக்க திரண்டு வந்தனர்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஸ்ரீலீலா, "இங்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் சிறுவயதில் குடும்பத்துடன் திருப்பதிக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். ஆனால், நான் இங்கே வந்து ரொம்ப நாட்கள் ஆயிற்று. நான் தெலுங்கில் பெல்லி சண்டாடி படத்தின் மூலம் அறிமுகமானபோது இங்கு வந்தேன். இப்போது மட்டுமே இங்கு வந்துள்ளேன். இன்னும் அறிவிக்கப்படாத, பெயர் சூட்டப்படாத தெலுங்கு மற்றும் தமிழ்ப்படங்கள் கைவசம் உள்ளன. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளிவரும்.

2021ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பெல்லி சண்டாடி படத்தின் மூலம் தெலுங்கில் நடிகையாக அறிமுகமாவதற்கு முன்பு ஸ்ரீலீலா கன்னட சினிமாவில் பணியாற்றினார். ’பெல்லி சண்டாடி’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், அது அவருக்கு பல கதவுகளைத் திறந்தது. 

ரவி தேஜாவின் தமக்கா, ராம் பொத்தினேனியின் ஸ்கந்தா, பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி மற்றும் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் போன்ற படங்களில் நடித்து தெலுங்கில் பிரபல நடிகையாக மாறினார். 

ஸ்ரீலீலா விரைவில் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாணுடன் ’உஸ்தாத் பகத் சிங்’ படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் தேவரகொண்டாவுடன் கௌதம் தின்னனூரியின் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் அவர் நடிக்க உள்ளார். பரசுராம் பெட்லாவின் ’ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் ஷெட்யூலை விஜய் முடித்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். வேறு என்னென்ன படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பதை உறுதிப்படுத்த ஸ்ரீலீலா மறுத்துவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9