அழகிய தீயே மூலம் அறிமுகம்.. சேரனின் ஆஸ்தான நாயகி.. கலைஞரின் வசனத்தில் நடித்த மலையாள மங்கை நவ்யா நாயரின் கதை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அழகிய தீயே மூலம் அறிமுகம்.. சேரனின் ஆஸ்தான நாயகி.. கலைஞரின் வசனத்தில் நடித்த மலையாள மங்கை நவ்யா நாயரின் கதை

அழகிய தீயே மூலம் அறிமுகம்.. சேரனின் ஆஸ்தான நாயகி.. கலைஞரின் வசனத்தில் நடித்த மலையாள மங்கை நவ்யா நாயரின் கதை

Marimuthu M HT Tamil Published Oct 14, 2024 07:34 AM IST
Marimuthu M HT Tamil
Published Oct 14, 2024 07:34 AM IST

அழகிய தீயே மூலம் அறிமுகம்.. சேரனின் ஆஸ்தான நாயகி.. கலைஞரின் வசனத்தில் நடித்த மலையாள மங்கை நவ்யா நாயரின் கதையை அவரது பிறந்த நாளான இன்று பார்ப்போம்.

அழகிய தீயே மூலம் அறிமுகம்.. சேரனின் ஆஸ்தான நாயகி.. கலைஞரின் வசனத்தில் நடித்த மலையாள மங்கை நவ்யா நாயரின் கதை
அழகிய தீயே மூலம் அறிமுகம்.. சேரனின் ஆஸ்தான நாயகி.. கலைஞரின் வசனத்தில் நடித்த மலையாள மங்கை நவ்யா நாயரின் கதை

யார் இந்த நவ்யா நாயர்?: 

நவ்யா நாயரின் இயற்பெயர் தான்யா வீணா. இவர் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஹரிபாட் என்னும் ஊருக்கு அருகிலுள்ள முத்துக்குளத்தில் 1985ஆம் ஆண்டு இதே தேதியில் அதாவது அக்டோபர் 14ஆம் தேதி பிறந்தவர். அவரது தந்தை ராஜூ, ஒரு தகவல் தொடர்புத்துறையினைச் சார்ந்தவராகவும், அவரது தாய் வீணா பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றினர்.                       மலையாள சினிமாவில் இயக்குநர் கே.மது இவரது தாய் மாமாவாகும். நடிப்பதற்கு முன்பு, பரதநாட்டியத்தில் தேர்ந்த பரதக்கலைஞராக இருந்தார், நவ்யா நாயர். 2001ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய நவ்யா, மும்பையினைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் மேனனை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்னும் மகன் ஒருவர் உள்ளார்.

நவ்யா நாயரின் திரைப்பிரவேசம்:

மலையாள இயக்குநர் சிபி மலையில், கடந்த 2001ஆம் ஆண்டு தனது இஷ்டம் என்னும் மலையாளத் திரைப்படத்தில் நடிகர் திலீப்பின் கதாநாயகியாக முதன்முதலில் சினிமாவில் நவ்யா நாயரை அறிமுகப்படுத்தினார். அவர் தான் சினிமாவில் தான்யா என்னும் இயற்பெயரை மாற்றிவிட்டு, நவ்யா நாயர் எனப்பெயர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் நிறைய மலையாளப் படங்களிலும் சில பெயர் சொல்லும் தமிழ்ப் படங்களிலும் நடித்துப் பெயர் பெற்றார், நடிகை நவ்யா நாயர்.

அழகிய தீயே: 2004ஆம் ஆண்டு அழகிய தீயே என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நவ்யா நாயர். இப்படத்தில் நடிகர் பிரசன்னாவும் அறிமுக நடிகர். இப்படத்தை ராதா மோகன் இயக்க நடிகர் பிரகாஷ் ராஜ் தயாரித்திருந்தார். இப்படத்தில் நந்தினி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த நவ்யா, பலரையும் ஈர்க்கும் வகையில் நடித்திருந்தார். விழிகளின் அருகினில் வானம் பாடல் இவரை தமிழ்நாடெங்கும் கொண்டுசேர்த்தது.

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி: பின் 2005ஆம் ஆண்டு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்னும் படத்தில் தங்கர்பச்சானின் ஜோடியாக, இரு பெண் குழந்தைகளின் தாயாக நடித்தார். இது அப்போது பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால் நடிகைகள் அம்மாவாக நடித்தால் மார்க்கெட் போய் விடும் எனும் சென்டிமென்ட் அப்போது பார்க்கப்பட்டது. தங்கர்பச்சான் இயக்கி நடித்த இப்படத்தில் தேன்மொழி என்னும் கதாபாத்திரத்தில் நவ்யா நாயர் நடித்து அசத்தியிருப்பார்.

கலைஞரின் வசனத்தில் நடித்த மலையாள மங்கை:

பாசக்கிளிகள்: இதனையடுத்து 2006ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியின் திரை வசனத்தில் உருவான பாசக்கிளிகள் படத்தின் கதாநாயகியாக, மரகதம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே ஆண்டு, அமிர்தம் என்னும் படத்தில் நடித்திருந்தார்.

சேரனுடன் இணைந்து நடித்த படங்கள்: அதன்பின் 2007ஆம் மாயகண்ணாடி படத்தின்மூலம், இயக்குநர் சேரனின் கதாநாயகியாக மாறினார். இந்த ஜோடி குறித்து நல்ல டாக் வரவே, சேரன் நடித்த ஆடும் கூத்து என்னும் படத்திலும் ராமன் தேடிய சீதை படத்திலும் நவ்யா நாயர் நடித்து பலரையும் ஈர்த்தார். கடைசியாக தமிழில் 2010ஆம் ஆண்டு இவர் நடித்த ரசிக்கும் சீமானே படத்திற்குப்பின் திருமணமாகி மும்பையில் செட்டிலாகிவிட்டார்,நவ்யா நாயர்.

இப்படி குறிப்பிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தாலும், இன்னும் இவரை நினைவில் வைக்கும் அளவுக்கு தனது தனித்துவமான நடிப்பினை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தியிருப்பார், நடிகை நவ்யா நாயர். அவருக்கு இன்று பிறந்தநாள். வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்.