தாரகாசுரன் மைந்தர்களின் தவம்..மைந்தனைக் காக்க பார்வதியுடன் மோதும் சிவன்! திருப்பங்களுடன் சிவசக்தி திருவிளையாடல் தொடர்
கார்த்திகைப் பெண்களிடம் பிறக்கும் சிவமைந்தன் கார்த்திக்கேயனை கொல்ல தாரகாசுரன் மைந்தர்கள் தவமிருக்க, மைந்தனைக் காக்க பார்வதியுடன் மோத இருக்கும் சிவன் என திடுக்கிடும் திடீர் திருப்பங்களுடன் சிவசக்தி திருவிளையாடல் வரும் வாரம் எபிசோடில் காட்சிகள் இடம்பெறவுள்ளது.

தாரகாசுரன் மைந்தர்களின் தவம்..மைந்தனைக் காக்க பார்வதியுடன் மோதும் சிவன்! திருப்பங்களுடன் சிவசக்தி திருவிளையாடல் தொடர்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது ஆன்மிகப் புராண தொடரான சிவசக்தி திருவிளையாடல் .
ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று வெற்றிகரமான தொடராக ஜூன் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இந்த வாரம் சிவன் பார்வதியின் அம்சமாக கார்த்திகைப் பெண்களிடம் பிறக்கிறார் சிவமைந்தன் கார்த்திக்கேயன். கார்த்திகைப் பெண்கள் ஏழு பேரும் அவனுக்கு அன்னையாக இருந்து வளர்க்கிறார்கள்.
