‘எங்க ஜோடி மக்களுக்கு அப்படி பிடிச்சிருக்கு.. மறுபடியும் நாங்க சேர்ந்து..’ - சாய்பல்லவி குறித்து சிவகார்த்திகேயன்!
“பாக்ஸ் ஆபீஸ் வசூலைத் தாண்டி, எங்களது ஜோடியை மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்தமுறை நாங்கள் இணையும் போது..” - சாய்பல்லவி குறித்து சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி நடிப்பில், கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான திரைப்படம் அமரன். பல்வேறு மொழிகளில் வெளியான இந்தத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறது. இந்த நிலையில், படத்தை மிகப்பெரிய வெற்றிபெற செய்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அண்மையில் தமிழில் படக்குழு வெற்றிவிழாவை நடத்திய நிலையில், தெலுங்கிலும் நேற்றைய தினம் வெற்றிவிழாவை நடத்தியது.
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசியதாவது, “ அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும், நானும் விஜய் டிவியில் இருந்தே ஒன்றாக பணியாற்றி வருகிறோம். நான் எப்படி கடினமாக உழைப்பேன் என்று அவருக்குத் தெரியும். அவர் எப்படி உழைப்பார் என்று எனக்குத் தெரியும். அந்த மையப்புள்ளிதான் எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்தது. அமரன் திரைப்படத்தை எடுக்க வைத்தது.