தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetha Raman: மன்னிப்பு கேட்க வைத்த மகாலட்சுமி.. சீதா கொடுத்த செம பதிலடி

Seetha Raman: மன்னிப்பு கேட்க வைத்த மகாலட்சுமி.. சீதா கொடுத்த செம பதிலடி

Aarthi V HT Tamil
May 02, 2023 10:39 AM IST

சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

சீதா ராமன்
சீதா ராமன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சீதா சத்யனிடம் கெஞ்ச அவன் இப்பவும் நான் மன்னிப்பு கேட்க வரலனா எனக்கும் மகாலட்சுமிக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும் என சொல்லி மன்னிப்பு கேட்க ஒத்துக் கொள்கிறான்.

பிறகு சீதா மற்றும் சத்தியன் இருவரும் மகாலட்சுமி வீட்டுக்கு வர சீதா ராமிடம் இங்க பாருங்க அவரை கூட்டிட்டு வந்துட்டேன் கீழே இறங்கி வாங்க பாஸ் என சொல்ல ராம் நீங்க மன்னிப்பு கேட்டால் தான் கீழே வருவேன் என சொல்கிறான்.

அடுத்ததாக சத்தியன் உள்ளே வந்ததும் மகாலட்சுமி அவனை அசிங்கப்படுத்துவது போல் பேச அவன் சேதுபதியை பார்த்து ராம் உங்க ரத்தம் தானே அவன் கீழே குதிச்சு அவனுக்கு ஏதாவது நடந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையா என கேட்கிறான். மகாலட்சுமி தேவையில்லாத பேச்சு எதற்கு? மன்னிப்பு தானே கேட்க வந்தான் மன்னிப்பு கேட்க சொல்லுங்க என சொல்ல அவன் மன்னிப்பு கேட்கிறான்.

ஆனாலும் மகாலட்சுமி கேட்கல சத்தமா என சொல்லி அவனை மேலும் மேலும் அவமானப்படுத்துகிறாள். இருந்தாலும் சீதாவுக்காக சத்தியன் மன்னிப்பு கேட்கிறான். பிறகு சீதா ராமை கூட்டி வர மேலே செல்ல அவளை அதட்டி கூப்பிடும் மகாலட்சுமி நீயும் மன்னிப்பு கேட்கணும் மறந்துட்டியா என சொல்ல சீதா மன்னிப்பு கேட்கிறாள்.

பிறகு மேலே சென்று மன்னிப்பு கேட்டு விட்டோம் என ராமை கீழே கூப்பிட அவன் சித்தி சொல்லாமல் நான் கீழே வரமாட்டேன் என சொல்கிறான். பிறகு மகா அவனை கீழே கூட்டிச் சென்று நீ ஜெயிச்சிட்ட ராம், உன் சித்தியோட மரியாதையை காப்பாத்திட்ட என சொல்லி உள்ளே அனுப்பி வைக்கிறாள்.

ராம் உள்ளே போனதும் மகாலட்சுமி சீதாவிடம் பார்த்தல்ல என்ன உன்னால ஒன்னும் செய்ய முடியாது என சொல்ல இந்த முறை வேண்டுமானால் காத்து உங்க பக்கம் வீசலாம் ஆனா நான் கண்டிப்பா திருப்பி அடிப்பேன் இதுக்கெல்லாம் பதில் கொடுப்பேன் என சீதா சவால் விடுகிறாள்.

அடுத்து ரூமுக்கு வந்த சீதா மன்னிப்பு கேட்டால் எனக்காக என்ன வேணாலும் செய்றேன்னு சொன்னீங்க ல வாங்க மகாபலிபுரம் போகலாம் என சொல்லி கூப்பிட முதலில் மறுக்கும் ராம் பிறகு அவளுடன் வெளியே செல்ல சம்மதிக்கிறான்.

இதை சீதா சத்தமாக சொல்ல இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் அர்ச்சனா மகாலட்சுமியிடம் இந்த விஷயத்தை சொல்ல ஓடுகிறாள். அதற்குள் சீதா ராமை அழைத்துக் கொண்டு மகாபலிபுரம் கிளம்பி விடுகிறாள். வெளியே வந்த சீதா மகாலட்சுமிக்கு போன் செய்து இந்த முறையும் நான் தான் ஜெயித்தேன். அவரோட வெளியே போக ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்ததற்கு நன்றி என்று பேசி வெறுப்பேற்றுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்