வகுப்பு மாறி உட்கார வைத்த நண்பன்; காட்டிக்கொடுத்த ‘நாளைய தீர்ப்பு’.. வாட்டி எடுத்த வாத்தியார் - சம்பவம் செய்த விஜய்!
நண்பனுக்காக வகுப்பு மாறி உட்காந்த விஜயை அந்த வகுப்பாசிரியர் ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் கண்டுபிடித்து கனகச்சிதமாக தூக்கி விட்டார் - சஞ்சீவ்!

‘தளபதி 69’ படத்தோடு, நடிப்புக்கு முழுக்குப்போடும் விஜய், முழு நேர அரசியல் வாதியாக, அரசியலில் களமிறங்க இருக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகளாக, கிராமங்களில் நூலகம் அமைத்தல், 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு கொடுத்தல், அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தல் உட்பட பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய், தன்னுடைய கட்சியின் முதல் மாநாடை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை மறுநாள் (அக்டோபர் 27 -2024) நடத்த இருக்கிறார். இதில், அவரது கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் உள்ளிட்ட பலவை அடங்கும் என்பதால், அதற்கான எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மேலோங்கி இருக்கிறது. இனி வாழ்க்கையின் சீரியஸான பாதையில் பயணிக்கப்போகும் விஜயை இனி திரையில் பார்க்க முடியாது என்ற சோகம், அவரது ரசிகர்கள் மத்தியில் மூச்சு முட்ட நிறைந்திருக்கும் நிலையில், அவரின் சில மகிழ்வான தருணங்களை இங்கு பார்க்கலாம்.