சல்மான்கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்.. ஜாம்ஷெட்பூரில் பதுங்கி இருந்த குற்றவாளியை கைது செய்த போலீசார்!
மர்ம நபர் ஒருவர் மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினார். அதில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கு தொடர்பாக ஜாம்ஷெட்பூரில் ஒருவரை கைது செய்துள்ளதாக மும்பை போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். அவரை வொர்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேல் நடவடிக்கைக்காக அவர் மும்பைக்கு கொண்டு வரப்படுவார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்
இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினார். அதில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் ஹெல்ப்லைனிற்கு இந்த மிரட்டல் செய்தி வந்தது, இந்த மிரட்டல் செய்தி வந்ததையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயுடனான விவகாரங்களைத் தீர்க்க ரூ .5 கோடி செலுத்தாவிட்டால், கொல்லப்பட்ட என்.சி.பி தலைவர் பாபா சித்திக்கை விட மோசமான விதியை சல்மான் கான் சந்திக்க நேரிடும் என்று அந்நபர் சல்மான் கானை எச்சரித்திருந்தார்.