RIP Ravi Shankar: வருஷமெல்லாம் வசந்தம் பட இயக்குநரும் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடலை எழுதியவருமான ரவி சங்கர் மறைவு!
RIP Ravi Shankar: வருஷமெல்லாம் வசந்தம் பட இயக்குநரும் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடலை எழுதியவருமான ரவி சங்கர் காலமானார்.

RIP Ravi Shankar: ‘’வருஷமெல்லாம் வசந்தம்'' திரைப்படத்தின் இயக்குநரும் பாடல் ஆசிரியருமான ரவி சங்கர் காலமானார்.
சிறுகதை மூலம் பாக்யராஜை ஈர்த்தவர்:
’பாக்யா’ என்ற இதழில் ‘குதிரை’ என்ற ஒரு சிறுகதை எழுதி, இயக்குநர் பாக்யராஜின் கவனத்தை ஈர்த்தவர். பின், இது நம்ம ஆளு போன்ற பாக்யராஜின் படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துவிட்டு, இயக்குநர் விக்ரமனின் உதவி இயக்குநராக வெகுகாலம் பணிசெய்தவர். இவரது எழுத்துத் திறமையைப் பார்த்த இயக்குநர் விக்ரமன், சூர்ய வம்சம் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுத வாய்ப்பளித்தார். அப்படி உருவானதுதான், 'ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உன்பேரை சொல்லும் ரோசாப்பூ'; 'சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு’ஆகியப் பாடல்களை எழுதி,அதனை மிகப்பெரியளவில் ஹிட்டடிக்கவைத்தார்.
அதன்பின், முதன்முதலாக மனோஜ் பாரதி, குணால், அனிதா ஹசநந்தனி ஆகியோரை வைத்து ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்னும் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்திலும் நான்கு பாடல்களை எழுதினார், ரவி சங்கர். குறிப்பாக, ’அடியே அனார்கலி, எங்கே அந்த வெண்ணிலா, முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்.. ஒன்று கேட்கிறேன் என்னைத் தெரிகிறதா’ ஆகியப் பாடல்களை எழுதியுள்ளார். இப்படம் இரண்டு மாநில விருதுகளை வென்றது. குறிப்பாக, இப்படத்தின் பாடல் ஆசிரியர் ரவி சங்கருக்கு ஒரு மாநில விருதும், அப்படத்தின் பாடல்களைப் பாடியவருக்கு உன்னி கிருஷ்ணனுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதும் கிடைத்துள்ளது.