“இவனெல்லாம் ஹீரோவா? காத்து வாங்கிய ‘காதல் கொண்டேன்’; செத்த வீட்டுக்கு கூட அந்த தனுஷ் வரல”-பாலாஜி பிரபு
தனுஷ் ‘காதல் கொண்டேன்’ படத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்தும், இன்னபிற விஷயங்கள் குறித்தும் பாலாஜி பிரபு மனம் திறந்து பேசி இருக்கிறார்.

“காத்து வாங்கிய ‘காதல் கொண்டேன்’.. ஆபத்துக்காலத்தில் ஓடி வந்த அன்புள்ளம்.. செத்த வீட்டுக்கு கூட தனுஷ் வரல”-பாலாஜி பிரபு
‘காதல் கொண்டேன்’ படத்தின் போது நடந்த கசப்பான சம்பவத்தை ஆஸ்கர் மூவிஸ் பாலாஜி பிரபு மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “நாங்கள் அப்போது ‘காதல் ரோஜா’ திரைப்படத்தை எடுத்து முடித்து இருந்தோம். தனுஷ் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார். ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தை அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் தனுஷ் அப்பாவான கஸ்தூரிராஜா, என்னுடைய அப்பா பாலாஜிக்கு போன் செய்து, சார் நான் உங்களை சந்திக்க வேண்டும் என்று கேட்டார்.