Selvaraghavan: வேதனையில் படுக்காதிங்க.. செருப்ப போட்டுட்டு கிளம்புங்க.. அட்வைஸ் சொன்ன செல்வராகவன்!
Selvaraghavan: வாழ்க்கையில் எந்தப் பிரச்சனை வந்தாலும், வேதனையில் படுத்துவிட வேண்டாம். அப்படி செய்தால், இந்த உலகம் ஏறி மிதித்துவிட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது என இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் கருத்து தெரிவித்துள்ளார்.

Selvaraghavan: வேதனையில் படுக்காதிங்க.. செருப்ப போட்டுட்டு கிளம்புங்க.. அட்வைஸ் சொன்ன செல்வராகவன்!
தமிழ் சினிமாவில் தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் நடிப்பின் மூலமும் நாளுக்கு நாள் ட்ரெண்ட் செட் செய்து வருகிறார் இயக்குநர் செல்வராகவன். இவர், தனது ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு ஜானரில் தந்து மக்களை 'அட' போட வைக்கிறார்.
தமிழில் செல்வராகவன் திரைப்படம் வருகிறது என்றால் அதை டி-கோடிங் செய்ய நிச்சயம் ஒரு கும்பல் கிளம்பும். காரணம் அவரது திரைப்படத்தில் அத்தனை நுணுக்கங்கள் நிறைந்திருக்கும்.
நுணுக்கமான கலைஞன்
படத்தில் மட்டுமல்ல, தன்னுடைய கருத்திலும் பல்வேறு நுணுக்கமான கருத்துகள் உள்ளது என்பதை சில காலமாக ரசிகர்களுக்கு உணர்த்தி வருகிறார் செல்வராகவன்.