Director Selvaraghavan: கேர்ள் ஃப்ரண்ட மறக்க முடியலையா?.. இத செய் எல்லாம் பறந்து போயிரும் - செல்வராகவன் அட்வைஸ்!
Director Selvaraghavan: “நாம் நம் கடந்த காலம் குறித்து யோசிப்பதை நிறுத்திவிட்டால், நம்முடைய மனசாட்சி அப்படியே அமைதியாகி விடும். நான் ஏன் கடந்த காலத்தை பற்றி சொல்கிறேன் என்றால்” - செல்வராகவன் அட்வைஸ்!

பிரபல இயக்குநரான செல்வராகவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில், இந்த கணத்தில் இருப்பது குறித்தான முக்கியத்துவதை பகிர்ந்து இருக்கிறார்.அதில் அவர் பேசும் போது, “ நம்முடைய வாழ்க்கையில், நம்முடைய மனதை சுடுகாடாக மாற்றுவது, நம்மை சந்தோஷம் இல்லாமல் வைப்பது உள்ளிட்டவையெல்லாம் எதையாலோ நடக்கிறது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
கடந்த காலம் வேண்டாமே
அப்படியில்லை, நாம் நம் கடந்த காலம் குறித்து யோசிப்பதை நிறுத்திவிட்டால், நம்முடைய மனசாட்சி அப்படியே அமைதியாகி விடும். நான் ஏன் கடந்த காலத்தை பற்றி சொல்கிறேன் என்றால், நம்முடைய வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரங்களில் கடந்த காலத்தை பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறோம். கடந்த கால நிகழ்வுகளை பொறுத்தவரை அதன் நினைவுகள் நிகழ்காலத்தில் பெரிய விஷயமாக நமக்கு தெரியும்.