கைகொடுத்த சஷ்டி விரதம்.. 5 வருஷம் காத்திருந்து பிறந்த குழந்தை.. கல்யாணத்திற்கு மருமகள் ஒத்துக்கொண்டது ஏன்? -நெப்போலியன்
காத்திருந்து பிறந்த குழந்தை.. கல்யாணத்திற்கு மருமகள் ஒத்துக்கொண்டது ஏன் என்பது குறித்து நெப்போலியன் பேசி இருக்கிறார்.

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நெப்போலியனின் மூத்த மகன் தனுஷூக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. ஜப்பானில் பிரமாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் குஷ்பு, ராதிகா சரத்குமார், கலா மாஸ்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து நெப்போலியனும் அவரது மனைவியும் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கின்றனர்.
அந்த பேட்டியில் அவர்கள் பேசியதாவது,
நெப்போலியன்: “தனுசுக்கு ஜப்பான் நகரின் டோக்கியோவிற்கு செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. இந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தோம். இதற்கிடையில் அவனுக்கு பெண் கிடைத்து விட்டதாக தகவல் கிடைத்தது. இரண்டும் ஒரே நேரத்தில் வருகிறதே என்று எண்ணி. தனுஷிடம் தற்போதைக்கு இந்த டோக்கியோ நகரின் ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு, கல்யாண வேலைகளை கவனிக்கலாமா என்று கேட்டோம்.
அதற்கு தனுஷ் நான் இந்த ட்ரிப்புக்காக கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காத்திருந்திருக்கிறேன். ஆகையால், எனக்கு இந்த ட்ரிப்பும் முக்கியம், கல்யாணமும் முக்கியம். ஆகையால், இந்த கல்யாணத்தை ஜப்பான் நகரின் டோக்கியோவில் நடத்தலாமே என்று கூறினான். அவனின் முடிவுப்படியே நாங்கள் ஜப்பானில் கல்யாணத்தை நடத்த முடிவு செய்தோம்.