Story of Song Sambo Siva Sambo: மனதில் ஓடிக்கொண்டிருந்த டியூன்..பாடல் ஒலிக்கவிட்டு சேஸிங் காட்சி ஷுட்டிங்
Story of Song Sambo Siva Sambo: இயக்குநர் சமுத்திரகனி திருவிழா பாடலை இசையமைக்க சொன்னபோதிலும், மனதில் ஓடிக்கொண்டிருந்த டியூன் ஆக ஜகடம் ஜகடம் பாடல் இருந்தது. எனவே அதை முதலில் இசையமைத்து தர அந்த பாடல் ஒலிக்கவிட்டு சேஸிங் காட்சி ஷுட்டிங் செய்தனர்.

தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டராக அமைந்த படங்களில் சமுத்திரகனி இயக்கத்தில் சசிக்குமார் நடித்த நாடோடிகள் படமும் ஒன்றாக உள்ளது. காதல், பேமிலி சென்டிமெண்ட், நட்பு, கோபம் என அனைத்து மனித உணர்வுகளை கலந்த படையைலாக வந்த இந்த படம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை தந்ததுடன் வசூலில் பட்டையை கிளப்பியது.
இந்த படம் பெற்ற வெற்றியால் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஒரு கதையின் க்ளைமாக்ஸ் காட்சியை இடைவேளையாக வைத்து அதன் பின்னர் நடக்கும் விஷயங்களை எதிர்பாராத திருப்பங்களுடன் சொன்ன விதத்தில் நாடோடிகள் தனித்துவ படமாக அமைந்தது.
பரபரப்பான இடைவேளை காட்சி
காதலர்கள் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி நண்பர்கள் இணைந்து சேர்த்து வைக்கும் சீன் ஆக நடோடிகள் இடைவேளை காட்சி இருக்கும். விறுவிறுப்பும், திருப்பமும் சற்றும் குறைவில்லாமல் இருக்கும் இந்த காட்சி படம் பார்ப்பவர்களை சீட் நுனிக்கே கொண்டு வந்தது. காதலுக்காக நண்பர்கள் செய்யும் தியாகத்தை எடுத்துக்கூறும் விதமாக இந்த பாடல் பரபர காட்சிகளுடன் பேக்ரவுண்டில் சம்போ சிவ சம்போ என்ற பாடல் ஒலிக்க அமைந்திருக்கும். படம் வெளியான காலகட்டத்தில் இந்த காட்சி வெகுவாக பேசப்பட்டது.