8 நாளுக்கு 25 கோடி.. தூண்டிலுக்கு சிக்காமல் தப்பிய உதயநிதி.. பஞ்சாயத்தை முடித்துவிட்ட கோர்டு!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பில் பங்கேற்காததால் 25 கோடி நஷ்டஈடு கேட்டு ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், உதயநிதி கதாநாயகனாக நடிக்க இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியதாகவும், அதன் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
8 நாள் கால்ஷீட் தராத உதயநிதி
மேலும், 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்துள்ளார். அந்த படமே தனது கடைசி படம் என கூறியதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஒப்பந்தப்படி, இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.