Karthigai Deepam: மலை உச்சியில் இருந்து விழுந்த ரம்யா, தீபா.. கார்த்திக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - கார்த்திகை தீபம்!
Karthigai Deepam: தூரத்தில் இருந்து பார்த்த ஐஸ்வர்யா தீபாவையும் மலை உச்சியில் இருந்து தள்ளி விட அவளும் சரிந்து விழுகிறாள், பிறகு போலீஸ் சம்பவ இடத்திற்கு வர ரியா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடியல் மலை உச்சியில் தீபா, ரம்யா, ரியா என மூவருக்கும் இடையே மோதல் உருவான நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
துப்பாக்கியை எடுத்த ரம்யா
அதாவது, ரம்யா துப்பாக்கியை எடுத்து சுட தவறுதலாக ரியா மீது குண்டு பாய அவள் உயிரிழக்கிறாள். அதன் பிறகு தீபா மற்றும் ரம்யா இடையே நடக்கும் மோதலில் ரம்யா மலை உச்சியில் இருந்து தவறி கீழே விழ தீபா கை கொடுத்து அவளை காப்பாற்ற முயற்சி செய்ய நீ போடும் உயிர் பிச்சை வேண்டாம் என்று ரம்யா கையை உதறி கீழே விழுகிறாள்.
இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்த ஐஸ்வர்யா தீபாவையும் மலை உச்சியில் இருந்து தள்ளி விட அவளும் சரிந்து விழுகிறாள், பிறகு போலீஸ் சம்பவ இடத்திற்கு வர ரியா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அங்கு தீபாவின் மோதிரம் விழுந்து கிடப்பதை பார்த்து கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான்.