தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கதிரை தேடி அலையும் கார்த்தி.. தீபாவுக்கு செக் வைத்த ஐஸ்வர்யா

Karthigai Deepam: கதிரை தேடி அலையும் கார்த்தி.. தீபாவுக்கு செக் வைத்த ஐஸ்வர்யா

Aarthi V HT Tamil
May 02, 2023 10:43 AM IST

கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

 கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் போலீசிடமிருந்து தப்பித்து கல்யாணம் மண்டபத்துக்குள்ள நுழைந்த கதிர் பொம்மை வேஷம் போட்டுக் கொண்டு இருக்க அப்போதே அங்கு வரும் போலீஸ் பொம்மை வேஷம் போட்டுக் கொண்டு இருக்க அப்போது அங்கு வரும் போலீஸ் கார்த்தியை கார்த்தியை வெளியே அழைத்து கதிர் தப்பி ஓடி வந்த விஷயத்தை சொல்கின்றனர்.

அவன் இங்க மண்டபத்தில் இருக்கக்கூட வாய்ப்புள்ளது ஆனால் நாங்க உள்ள வந்தா உங்களுக்கு இடைஞ்சலா இருக்கும் ஆகையால் நீங்களே தேடிப் பாருங்க நாங்க வெளியே வந்தால் பிடித்துக் கொள்கிறோம் என சொல்ல கார்த்திக் உள்ளே சென்று கதிரை தேட ஆரம்பிக்கிறான். அப்போது பாத்ரூமில் ஏற்கனவே பொம்மை வேஷம் போட்டவர் சிக்கி இருக்க கார்த்தி கதவை திறந்து விட வெளியே வந்த அவர் நடந்த விஷயங்களை சொல்ல அப்போ பொம்மை வேஷத்தில் கதிர் தான் இருப்பான் என சொல்லி அங்கே தேடி வருகிறான்.

அதற்குள் கதிரை பார்த்த நட்சத்திரா அவனை அழைத்துச் சென்று தனது ரூமுக்குள் மறைத்து வைக்கிறாள். இதனால் கார்த்தி கதிரை பிடிக்க முடியாமல் போகிறது. அடுத்து அவன் ரூம் ரூமாக தேடிக் கொண்டிருக்க கதிர் நட்சத்திராவிடம் தனது செல்போன் காணாமல் போன விஷயத்தை சொல்ல அவள் செல்போனை தேடி வருகிறாள்.

இந்த நேரத்தில் கார்த்திக் எதிரே மீனாட்சி வர அவளிடம் கதிரை தேடும் விஷயத்தை சொல்ல கதிர் மட்டும் இப்போது சிக்கிக்கொண்டால் நட்சத்திரா பற்றிய எல்லா உண்மைகளும் வெளியே வந்துவிடும் இந்த கல்யாணமும் நின்று விடும் என சொல்கிறாள்.

மறுபக்கம் தீபா வீட்டுக்கு வரும் மாப்பிள்ளை வீட்டார் ஐஸ்வர்யா சொன்னது போல பரிசம் போட வந்திருப்பதாக சொல்லி பரிசம் போடுகின்றனர். அந்த மாப்பிள்ளை தீபாவுடன் சேர்ந்து போட்டோ எடுக்க தீபா போட்டோ எதுக்கு என கேட்க உன்னை கட்டிக்க போறவன் தானே இதில் என்ன இருக்கு என சொல்லி போட்டோ எடுக்கிறான். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்க தீபா மட்டும் சோகமாக இருக்கிறாள். பிறகு அந்த மாப்பிள்ளை ஐஸ்வர்யாவுக்கு தீபாவுடன் எடுத்த போட்டோவை அனுப்ப இதை பார்த்த ஐஸ்வர்யா தீபா சாப்டர் க்ளோஸ் என சந்தோஷப்படுகிறாள்.

அந்த நேரம் பார்த்து நட்சத்திரா போனை தேடிக் கொண்டு வர அவளிடம் ஐஸ்வர்யா இந்த போட்டோவை காட்டி நடந்த விஷயங்களை சொல்ல நட்சத்திராவும் சந்தோஷம் அடைகிறாள்.

அதன் தொடர்ச்சியாக ஜெயிலில் சிவா காட்டப்படுகிறான். அங்கு வரும் ராஜு தர்மலிங்கம் மண்டபம் பற்றி விசாரித்த விஷயங்களை சொல்ல சிவா இனி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பார்த்து பார்த்து தான் செய்ய வேண்டும் என சொல்கிறான். மேலும் கார்த்திக் தீபாவின் கழுத்தில் தான் தாலி கட்ட வேண்டும் என சொல்கிறான்.

அதன் பிறகு அந்த ஸ்டேஷன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவாவின் பள்ளி பருவ நண்பன் என தெரிய வர அவன் மூலமாக சிவா ஜெயிலிலிருந்து வெளியே வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்