மனைவியின் தொப்புள் கொடியை வெட்டிய இர்ஃபான்.. இரட்டை ஆயுள் தரணும்.. உதவும் ஆளுங்கட்சி புள்ளி.. வறுத்தெடுக்கும் பாண்டியன்
மனைவியின் தொப்புள் கொடியை வெட்டிய இர்ஃபான்.. இரட்டை ஆயுள் தரணும்.. உதவும் ஆளுங்கட்சி புள்ளி.. வறுத்தெடுக்கும் பாண்டியன்

தன் மனைவி மற்றும் குழந்தையின் தொப்புள் கொடியை பிரபல யூட்யூபர் இர்ஃபான் கத்திரிக்கோலால் வெட்டி, அதனை வீடியோவாகப் பதிவுசெய்து, தனது யூட்யூபில் வெளியிட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கிங் 24*7 யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘இர்ஃபானை பொறுத்தவரை ஆளும்கட்சியின் செல்லம். ஆளுங்கட்சி தான் இவரது எல்லாத் தவறுக்கும் காரணம். முதல் நிகழ்வு, அவரே எல்லா சுங்கச் சாவடிகளிலும் கார் ஓட்டிக்கொண்டு அவரே வீடியோ எடுத்துக்கொண்டு வருகிறார். அப்போது மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு வரும்போது, வண்டி ஓட்டிக்கொண்டே வீடியோ எடுத்துக்கொண்டு வருகிறார்.
அப்போது பல்கலைக்கழகத்தில் சுத்திகரிப்பு செய்யும் ஒரு வயதான மூதாட்டி, அந்தம்மா ஸ்பாட்டிலேயே அவரது கார் மோதி அடிபட்டு இறந்துவிடுகிறார். அப்போது மக்கள் எல்லோரும் துரத்துறாங்க. அந்தம்மாவை மருத்துவமனையில் சேர்த்து இருக்கணும். ஆனால் அங்கு அவர் நிற்கக் கூட இல்லை. காரை எடுக்கல. ஏனென்றால், மக்கள் தடுத்து நிறுத்திட்டாங்க. உடனே, வேறு காரில் ஏறி சென்றுவிட்டார்.