Minister M. Subramanian : ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு வைப்பதை போல ஓமந்துரார் மருத்துவமனை சட்டபேரவையாக மாறாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஓமந்தூரார் மருத்துவமனை ஒருபோதும் தலைமைச்செயலகமாக மாற்றப்படாது மருத்துவ தேவை அதிகரித்து வரும் நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனவே ஓமந்தூரார் மருத்துவமனை எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு வைப்பதை போல ஓமந்துரார் மருத்துவமனை சட்டபேரவையாக மாறாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.8.72கோடி மதிப்புள்ள நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”500க்கு மேற்பட்ட முறை இந்த பதிலை கூறிவிட்டேன். ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறாது.