போர் கொடுத்த பொறி.. உடலை பதம் பார்த்த தோட்டாக்கள்.. “அசோக சக்கரத்த வாங்கும் போது கூட ஒரு சொட்டு கண்ணீர்” -ராணுவ அதிகாரி
முகுந்த் மனைவி, போரில் இறந்த ராணுவ வீரரருக்கு வழங்கப்படும் அசோக சக்கரத்தை வாங்கும் போது கூட, ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. - ராணுவ அதிகாரி!

போர் கொடுத்த பொறி.. உடலை பதம் பார்த்த தோட்டாக்கள்.. “அசோக சக்கரத்த வாங்கும் போது கூட ஒரு சொட்டு கண்ணீர்” -ராணுவ அதிகாரி
சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அமரன்’. கமல் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படம், அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 2014 ம் ஆண்டு தீவிரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் நடந்த போரில் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், முகுந்த் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அண்மையில் பேட்டிக்கொடுத்தார்.