Death Anniversary of Writer Sujatha : சயின்ஸ் ஃபிக்சன் கதைகளால் கவனம் ஈர்த்த எழுத்தாளர் சுஜாதா நினைவு தினம் இன்று!
Death Anniversary of Writer Sujatha : சயின்ஸ் ஃபிக்சன் கதைகளால் கவனம் ஈர்த்த எழுத்தாளர் சுஜாதா நினைவு தினம் இன்று!

Death Anniversary of Writer Sujatha : சயின்ஸ் ஃபிக்சன் கதைகளால் கவனம் ஈர்த்த எழுத்தாளர் சுஜாதா நினைவு தினம் இன்று!
காவிரியின் கரையில், அரங்கனின் அருளில் திகழும் ஸ்ரீரங்கத்தில் 1935ம் ஆண்டு மே 3ம் தேதி பிறந்தவர். ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு. பின்னர் புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் பட்டம் பெற்றார்.
இவரும் மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத்தலைவரும், இவரும் இங்கு ஒன்றாக படித்தவர்கள். பின்னர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடியில் மின்னணு பொறியியல் படித்தார்.
டெல்லியில் மத்திய அரசுப்பணியாற்றியவர். 14 ஆண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு, பின்னர் பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவு மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி அந்நிறுவனத்தின் பொது மேலாளர் ஆனார். ஓய்வுக்குப்பின் சென்னையில் வசித்தார்.