Complaint Against Director Cheran: நடவடிக்கை தேவை! நடுரோட்டில் நடந்த சம்பவம் - சிசிடிவி காட்சிகளுடன் சேரன் மீது புகார்
கடலூரில் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளுடன் சேரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Complaint Against Director Cheran: நடுரோட்டில் நடந்த சம்பவம் - சிசிடிவி காட்சிகளுடன் சேரன் மீது புகார்
கடந்த இரு நாள்களுக்கு முன் கடலூரில் தனது காரை பின்னால் துரத்தி வந்த தனியார் பேருந்து ஓட்டுநருடன் இயக்குநரும், நடிகருமான சேரன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் விடியோவும் வெளியாகி வைரலானது.
இந்த விவகாரத்தில் இயக்குநர் சேரன் மீது நடவடிக்கை தேவை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகளுடன் சேரன் மீது புகார்
கடலூரில் தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குநர் சேரன் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளை அளித்து, இயக்குநர் சேரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.