ரத்னாவிடம் அவமானப்பட்ட வெங்கடேஷ்.. பரணியிடம் சரண்டர் ஆன ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரத்னாவிடம் அவமானப்பட்ட வெங்கடேஷ்.. பரணியிடம் சரண்டர் ஆன ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

ரத்னாவிடம் அவமானப்பட்ட வெங்கடேஷ்.. பரணியிடம் சரண்டர் ஆன ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

Divya Sekar HT Tamil Published Oct 24, 2024 11:56 AM IST
Divya Sekar HT Tamil
Published Oct 24, 2024 11:56 AM IST

ரத்னாவிடம் அவமானப்பட்ட வெங்கடேஷ். பரணியிடம் சரண்டர் ஆன ஷண்முகம். அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம்.

ரத்னாவிடம் அவமானப்பட்ட வெங்கடேஷ்.. பரணியிடம் சரண்டர் ஆன ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!
ரத்னாவிடம் அவமானப்பட்ட வெங்கடேஷ்.. பரணியிடம் சரண்டர் ஆன ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

ஷண்முகம், பரணி பிரிந்துடுவாங்க

அதாவது, சௌந்தரபாண்டி என்ன அக்கா இவங்களுக்கு பிரச்சனை வரும்னு சொன்ன.. ஆனால் இப்போ இப்படி சொல்லிட்டு போறா என்று கேட்க பாண்டியம்மா கண்டிப்பா இவர்களுக்கு இடையே பிரச்சனை வரும். ஷண்முகம், பரணி பிரிந்துடுவாங்க, எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு என்று சொல்கிறாள்.

நீ ஸ்கூலுக்கு வர வேண்டாம்

அதை தொடர்ந்து வெங்கடேஷ் ஸ்கூலுக்கு கிளம்ப ரத்னா அவனுடன் வருவதாக சொல்ல வெங்கடேஷ் கல்யாணத்துக்கு முன்னாடி தான் குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு போன, இப்போ எதுக்கு போகணும் என்று சொல்கிறான்.

ரத்னா நான் குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு போகல, என் அண்ணனும் பணத்துக்காக என்னை வேலைக்கு அனுப்பல. அது என்னுடைய கனவு என்று சொல்கிறாள். இருந்தாலும் வெங்கடேஷ் நீ ஸ்கூலுக்கு வர வேண்டாம் என்று சொல்லி கிளம்பி செல்கிறான்.

ஷண்முகம் டி வாங்கி வந்து கொடுத்து கூல் செய்கிறான்

அடுத்து பரணி ஹாஸ்பிடல் வந்து விட ஷண்முகம் ஹாஸ்பிடல் வந்து அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்ய பரணி கோபமாக பேசுகிறாள். ஷண்முகம் அதான் மன்னிப்பு கேட்டுட்டேன்ல என்று சொல்லி பேச பரணி போய் டி வாங்கிட்டு வா அப்போ தான் சமாதானம் ஆவேன் என்று சொல்கிறாள். பிறகு ஷண்முகம் டி வாங்கி வந்து கொடுத்து கூல் செய்கிறான்.

அடுத்து நடக்க போவது என்ன

இதையடுத்து ரத்னா ஸ்கூலுக்கு வர வெங்கடேஷ் உன்னை தான் வர வேண்டாம்னு சொன்னேனே என்று கோபப்பட்ட இது ஸ்கூல் இங்க நான் கரஸ்பாண்டண்ட், நீங்க சாதாரண டீச்சர். நான் சொல்றதை தான் நீங்க கேட்கணும், கிளாசுக்கு போங்க என்று பதிலடி கொடுக்க வெங்கடேஷ் அவமானப்பட்டு நிற்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.