அவ்வளவு அவமானப்படுத்துறாங்க.. கேரக்டரை தவறாக மதிப்பிடுறாங்க.. நெருப்பைக் கக்கிய அல்லு அர்ஜூன்
அவ்வளவு அவமானப்படுத்துறாங்க.. கேரக்டரை தவறாக மதிப்பிடுறாங்க.. நெருப்பைக் கக்கிய அல்லு அர்ஜூன் பற்றி அறியலாம்.

அவ்வளவு அவமானப்படுத்துறாங்க என்றும், கேரக்டரை தவறாக மதிப்பிடுறாங்க எனவும் தெலங்கானா முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு அல்லு அர்ஜூன் பதிலளித்துள்ளார்.
நடந்தது என்ன?:
உலகெங்கும் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸானது. அதில் குறிப்பாக தெலங்கானாவில் ரசிகர்களுக்காக டிசம்பர் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படத்துக்கான பிரிமீயர் ஷோக்கள் போடப்பட்டன. அதனால், அந்த காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜுன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படம் பார்க்க ஹைதராபாத்தில் ஆர்.டி.சி. கிராஸ் ரோட்ஸில் உள்ள சந்தியா தியேட்டருக்கு வந்தார். இதனை அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அங்கு அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்து நெரிசல் ஏற்பட்டது.
அதில் ஹைதராபாத்தின் எல்.பி.நகரில் வசிக்கும் ரேவதி என்கிற இளம்பெண், டிசம்பர் 4ஆம் தேதி, படம்பார்க்க சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேலும், அவரது மகன் மூளைச்சாவு அடைந்தார். தற்போது வென்டிலேட்டரில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்தச் சம்பவம் குறித்து தெலங்கானா சட்டப்பேரவையில், தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜூன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.