கங்கை நதிக்கரை..ரிஷிகேஷில் வைத்து இனிதே நடந்த திருமணம்..திருமதி ஆன இடையழகி ரம்யா பாண்டியன்
ரசிகர்களால் இடையழகி என்று அழைக்கப்படும் நடிகை ரம்யா பாண்டியன் திருமணம் ரிஷிகேஷில் வைத்து நடந்து முடிந்துள்ளது. இவரது திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

கங்கை நதிக்கரை..ரிஷிகேஷில் வைத்து இனிதே நடந்த திருமணம்..திருமதி ஆன இடையழகி ரம்யா பாண்டியன்
தமிழ் நடிகையான ரம்யா பாண்டியன் ஜோக்கர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ஆண் தேவதை, மலையாளத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் உள்பட சில படங்களில் நடித்தார். இதையடுத்து ரம்யா பாண்டியன் தனது காதலரை கரம் பிடித்து திருமதி ஆகியுள்ளார்.
இந்து முறைப்படி திருமணம்
பிரபல சினிமா இயக்குநர் துரை பாண்டியன் மகளான ரம்யா பாண்டியன், பஞ்சாப்பை சேர்ந்த தொழிலதிபர், யோகா பயிற்சியாளருமான லோவல் தவான் ஆகியோர் காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து இருவீட்டாரின் சம்மத்ததுடன் இவர்களின் திருமணம் உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்வில் இரு வீட்டாரும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். கங்கை நதிக்கரையோரம், இந்து முறைப்படி இவர்களின் திருமணம் நடந்துள்ளது.