Pa Ranjith: ‘ரஞ்சித் சாரால் என்னை அழைக்கலை.. அசிங்கமாத்தான் இருக்கு’: சாதி குறித்து பேசிய நடிகர் கலையரசன்
Pa Ranjith:‘ரஞ்சித் சாரால் என்னை அழைக்கலை.. அசிங்கமாத்தான் இருக்கு’என நடிகர் கலையரசன் பேட்டியளித்துள்ளார்.

Pa Ranjith: இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் விரைவில் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள திரைப்படம், வாழை. இப்படத்தில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவுசெய்ய, இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார். இந்தப் படம் மூலம், மாரிசெல்வராஜ் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படம் தொடர்பாக நடிகர் கலையரசன் குமுதம் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் கேள்வி மற்றும் பதில் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தங்கலான் படத்தில் நீங்க இல்லை. தங்கலான் படம் பார்த்திட்டீங்களா?
தங்கலான் படம் பார்த்துட்டேன். எனக்கு செகண்ட் ஆஃப் ரொம்ப பிடிச்சிருந்தது. இன்டர்வெல் முன்னாடி, கொஞ்சம் ஸ்லோவானது மாதிரி இருந்தது. படமாக பிடிச்சிருந்தது. நடிகர்கள் நடிச்சிருந்த விதம், பார்வதி சீன் பை சீன் பயங்கரமாக நடிச்சிருக்காங்க. வெவ்வேறு காலகட்டத்தில் விக்ரம் சார் பயங்கரமாக நடிச்சிருக்காரு. எல்லோருமே நல்லா பண்ணியிருக்காங்க. செகண்ட் ஆஃப் சீக்கிரமே நடிச்சது மாதிரி ஃபீல் ஆனது.