29 Years of Murai Maman:'எங்க அக்கா மகளே இந்து’.. கவுண்டமணியின் தரமான காமெடி.. சுந்தர்.சியின் முதல் படமான ’முறைமாமன்’
29 Years of Murai Maman: சுந்தர்.சியின் முதல் படமான ‘முறைமாமன்’ திரைப்படத்தில், கவுண்டமணியின் தரமான காமெடி ஒர்க் அவுட் ஆகி, படம் வெளியாகி 29 ஆண்டுகள் கழித்தும் பேசவைக்கிறது.

29 Years of Murai Maman:'எங்க அக்கா மகளே இந்து’.. கவுண்டமணியின் தரமான காமெடி.. சுந்தர்.சியின் முதல் படமான ’முறைமாமன்’
29 Years of Murai Maman: 1995ஆம் ஆண்டில், நடிகர் ஜெயராம் மற்றும் குஷ்பூ ஆகியோரை வைத்து சுந்தர். சி முதன்முறையாக இயக்கிய திரைப்படம், முறைமாமன். இந்தப் படத்தில் ஜெயராம் மற்றும் கவுண்டமணி இணைந்து செய்த காமெடி காட்சிகள் படுபிரபலம். இப்படத்திற்கு, வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
முறைமாமன் திரைப்படத்தின் கதை என்ன?:
பன்னெடுங்காலமாக சிறுசுவின் குடும்பத்திற்கும், அவரது உறவினரும் பரமேஸ்வரன் குடும்பத்துக்கும் இடையே பகை இருந்து வருகிறது. பரமேஸ்வரனின் சகோதரனால், சிறுசுவின் தந்தை கொலை செய்யப்பட்டதும், சிறுசுவின் அக்கா சாரதா, பரமேஸ்வரனின் உறவினரை காதல் திருமணம் செய்ததும் இரு குடும்பங்களுக்கு இடையிலான பகைக்குக் காரணமாக இருந்து வருகிறது.