Actress Kushboo: ’என்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு சொன்னாங்க.. சுண்டுவிரல் கீழதான் சுந்தர் சி இருந்தார்’ -குஷ்பு
Actress Kushboo: நான் விலகிக் கொள்கிறேன் நீங்கள் வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னேன். ஆனால் அவருடைய அதிர்ஷ்டமா இல்லை துரதிஷ்டவசமா தெரியவில்லை. - குஷ்பு

பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு தன்னுடைய கர்ப்ப காலத்தில் சந்தித்த பிரச்சினைகள் குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார்.
பிசிஓடி பிரச்சினை
இது குறித்து அவர் பேசும் போது, “நிறைய பெண்களுக்கு பிசிஓடி பிரச்சினைகள் இருக்கும். எனக்கும் அப்போது அது போன்ற பிரச்சினைகள் இருந்தன. நான் அதற்காக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னை சோதித்த மருத்துவர், நான் குழந்தை பெற்றுக் கொள்வது கொஞ்சம் கடினம் என்று கூறியிருந்தார்.
சுந்தர் சி என்னிடம் காதலை சொல்லும் பொழுது, உனக்கும் எனக்கும் ஒரு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் என்பதை சொல்லித்தான் காதலை வெளிப்படுத்தினார். அப்படி ஒருவர் என்னிடம் காதலை வெளிப்படுத்தி இருக்கும் பொழுது, அவரிடம் சென்று உங்களுக்கு என்னால் குழந்தை பெற்றுக் கொடுக்க முடியாது என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.