Congress: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் இதுதான்! கையெழுத்தானது ஒப்பந்தம்! இதொ முழு விவரம்!
”தேனி தொகுதிக்கு பதிலாக திருநெல்வேலி தொகுதியும், திருச்சி தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியும், ஆரணி தொகுதிக்கு பதிலாக கடலூர் தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது”

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தொகுதி விவரங்கள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் அஜோய் குமார் உள்ளிட்டோர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது உடன் இருந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தொகுதிகள் மாற்றம்!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேனி தொகுதிக்கு பதிலாக திருநெல்வேலி தொகுதியும், திருச்சி தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியும், ஆரணி தொகுதிக்கு பதிலாக கடலூர் தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
