தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Lok Sabha Election 2024: ‘பாஜகவின் 400+ படம்! முதல் நாளிலேயே ப்ளாப்!’ கலாய்த்துவிட்ட தேஜஸ்வி!

Lok sabha Election 2024: ‘பாஜகவின் 400+ படம்! முதல் நாளிலேயே ப்ளாப்!’ கலாய்த்துவிட்ட தேஜஸ்வி!

Kathiravan V HT Tamil
Apr 20, 2024 02:27 PM IST

”அடுத்தடுத்து நடைபெறும் தேர்தல்களிலும் சிறப்பாக செயல்படுவோம்”

பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்
பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இது தொடர்பாக பேசி உள்ள ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், "அவர்களின் (பாஜக) '400 பிளஸ்' திரைப்படம் வாக்குப்பதிவின் முதல் நாளிலேயே சூப்பர் ஃப்ளாப்பாக மாறிவிட்டது. பீகாரில் ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடந்த நான்கு தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அடுத்தடுத்து நடைபெறும் தேர்தல்களிலும் சிறப்பாக செயல்படுவோம் என்று கூறினார். 

2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது நான்கு மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைவாகவே இருந்தது, ஆனால் இந்தத் தொகுதிகளில் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம். பாஜக தலைவர்களின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் சோர்ந்து போய் உள்ளனர். .

பீகாரில் மகா கூட்டணியின் ஒரு பகுதியான விகாஷீல் இன்சான் கட்சியின் (விஐபி) தலைவரான முகேஷ் சஹானியும் இதே கருத்தை எதிரொலித்தார்.

நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற 4 மக்களவைத் தொகுதிகள் மட்டுமின்றி, அடுத்த கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் மீதமுள்ள 36 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார் அவர்.

பீகாரில் வெள்ளிக்கிழமை முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற ஜமுய், நவாடா, கயா மற்றும் அவுரங்காபாத் ஆகிய நான்கு தொகுதிகளில் 48.23 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் பாஜக மற்றும் நிதிஷ் குமார் தலைமயிலான ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி, 39 இடங்களை கைப்பற்றியது, ஒரே ஒரு இடத்தில் மட்டுமே மகாகட்பந்தன் கூட்டணி வெற்றி பெற்று இருந்தது. 

இந்த நிலையில் தற்போது நடைபெறும் நாடாளுமன்றத்தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கின்றன. 

உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு பிறகு அதிக எம்.பி தொகுதிகள் உள்ள மாநிலமாக பீகார் உள்ளதால் அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக பீகார் உள்ளது. 

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல்

543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.

WhatsApp channel