தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Rajput: ’உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம்!’ ராஜ்புத் சமூகத்தினர் அதிரடி முடிவு! ஏன் தெரியுமா?

Rajput: ’உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம்!’ ராஜ்புத் சமூகத்தினர் அதிரடி முடிவு! ஏன் தெரியுமா?

Kathiravan V HT Tamil
Apr 18, 2024 05:41 PM IST

"பாரதிய ஜனதா கட்சி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வில் ராஜ்புத் சமூகத்தை புறக்கணித்ததன் மூலம் அவர்களை அவமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புறக்கணிப்பு முடிவை எடுத்து உள்ளதாக அவர் கூறினார்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என ராஜ்புத் சமூகத்தினர் முடிவு செய்து உள்ளனர்,
உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என ராஜ்புத் சமூகத்தினர் முடிவு செய்து உள்ளனர்,

ட்ரெண்டிங் செய்திகள்

இங்குள்ள ராஜபுத்திரர்கள் மகாபஞ்சாயத்தை நடத்தி, கட்சி டிக்கெட் விநியோகத்தின் போது சமூகத்தை புறக்கணித்ததாகக் கூறி முசாபர்நகர், கைரானா மற்றும் சஹாரன்பூர் மக்களவைத் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை புறக்கணிக்க முடிவு செய்ததாக ஒரு தலைவர் கூறி உள்ளார்.

கிசான் மஸ்தூர் சங்கதன் தேசியத் தலைவரும், அப்பகுதியின் முக்கிய ராஜ்புத் தலைவருமான தாக்கூர் பூரன் சிங், கேடா பகுதியில் செவ்வாயன்று 'மகாபஞ்சாயத்துக்கு' அழைப்பு விடுத்து இருந்தனர். இதில் முசாபர்நகர் தொகுதி முழுவதும் பரவியுள்ள சௌபிசா ராஜ்புத் சமூகத்தினர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து மற்ற ராஜ்புத் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.

"பாரதிய ஜனதா கட்சி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வில் ராஜ்புத் சமூகத்தை புறக்கணித்ததன் மூலம் அவர்களை அவமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புறக்கணிப்பு முடிவை எடுத்து உள்ளதாக அவர் கூறினார். 

"இந்தப் பகுதிகளில் உள்ள ராஜ்புத் சமூக மக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டார்கள், ஆனால் அவருக்குப் பதிலாக மற்ற கட்சிகளின் வலுவான போட்டியாளரைத் தேர்ந்தெடுப்பார்கள்," என்று அவர் கூறினார்.

உத்தர பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. முசாபர்நகரில் சஞ்சீவ் பல்யானும், கைரானா மக்களவைத் தொகுதியில் பிரதீப் சவுத்ரியும் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டு உள்ளனர். பால்யன் மற்றும் சுதாரி இருவரும் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் சிட்டிங் எம்.பி.க்கள். சஹாரன்பூரில் பாஜக ராகவ் லகன்பால் சர்மாவை நிறுத்தி உள்ளது.

அவர்கள் எடுக்கும் முடிவுகளே மேற்கு உத்தர பிரதேசத்தில் பாஜகவின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும் என்று 'மகாபஞ்சாயத்' கூறியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024:

543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி (நாளை) ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

WhatsApp channel