தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  World Cup Cricket 2023 : ‘ஐசிசி தரவரிசை மாறியுள்ளது’ - பாக். கிரிக்கெட் பயிற்சியாளர் பேட்டி

World Cup Cricket 2023 : ‘ஐசிசி தரவரிசை மாறியுள்ளது’ - பாக். கிரிக்கெட் பயிற்சியாளர் பேட்டி

Priyadarshini R HT Tamil
Oct 31, 2023 12:50 PM IST

பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் பிராட்பர்னைப் பொறுத்தவரை, அவரது அணி இந்தியாவில் விளையாடாததால் ஐசிசி தரவரிசையில் இறங்கியுள்ளது.

கொல்கத்தா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்
கொல்கத்தா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் (Hindustan Times)

ட்ரெண்டிங் செய்திகள்

ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற பின்னர் அவர்களின் நிலை குறுகிய காலமே நீடித்தது. ஆனால், ஆசியக் கோப்பையில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற பாகிஸ்தான் அணி மீண்டும் முதலிடம் பிடித்தது. 

ஆசியக் கோப்பையை வெல்லும் அணி பட்டியலில் இருந்த பாகிஸ்தானால் இறுதிப் போட்டிக்கு கூட செல்ல முடியவில்லை. அவர்கள் நம்பர் 1 தரவரிசையை இழந்தது மட்டுமல்லாமல், 2023 உலகக் கோப்பையில் அவர்களின் எதிர்காலம் குறித்தும் சந்தேகம் எழுந்தது. சந்தேகங்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டது. 

நான்கு போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான், தற்போது போட்டியில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. எஞ்சிய 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், அரையிறுதிக்கு தகுதி பெற, மற்ற போட்டிகளின் முடிவுகளை பார்க்க வேண்டும்.

பாகிஸ்தானுக்கு என்ன நேர்ந்தது? டைட்டிலைப் பிடித்தவர்களில் ஒருவர் எப்படி அரையிறுதிக்குள் நுழைய முடியாமல் திணறுகிறார்? பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் கூறுகையில், 10 அணிகள் பங்கேற்கும் போட்டியில் எந்த தலையீடும் இருக்கக்கூடாது. இந்தப் போட்டியில் 10 அணிகள் உள்ளன. உலகின் தலைசிறந்த 150 கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர், என்று அவர் பாகிஸ்தான் கட்டாயம் வெற்றியடைய வேண்டிய பங்களாதேசுக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த போட்டிக்கு முன்னதாக தெரிவித்தார். 

பிராட்பர்னைப் பொறுத்தவரை, ஐசிசி தரவரிசை மாறியுள்ளது. ஐசிசி தரவரிசையைப் பொறுத்தவரை, அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை நாங்கள் அறிவோம், ஏனெனில் நாங்கள் இந்தியாவுடன் விளையாடவில்லை, பல சிறந்த நாடுகளுடன் நாங்கள் விளையாட முடியாது என்று அவர் கூறினார். 

நியூசிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், பாகிஸ்தான் இன்னும் உலகின் சிறந்த அணியாக மாறவில்லை, ஏனெனில் இந்தியா போன்ற அணிகளை தங்கள் சொந்த இடத்திலே வெற்றிபெறமுடியவில்லை. 

ஏப்ரல் மாதத்தில் நாங்கள் ஐந்தாவது இடத்தில் இருந்தோம், போட்டிக்கு முன் நாங்கள் முதலிடத்தில் இருந்தோம், அங்குதான் நாங்கள் யதார்த்தமாக இருக்கிறோம். நாங்கள் இப்போது இந்தப் போட்டியில் இருக்கிறோம். நாங்கள் தரமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும். மேலும் நமது விளையாட்டின் மூன்று துறைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். எங்கள் தேசத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர நாங்கள் ஆசைப்படுகிறோம். 

இந்த கிரிக்கெட் அணியைப் பற்றி நமது தேசம் பெருமைப்பட வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். மேலும் கடந்த நான்கு ஆட்டங்களில் எங்கள் விளையாட்டின் அனைத்து துறைகளையும் நாங்கள் ஒன்றாக இணைக்கவில்லை என்பதை அறிகிறோம். ஆனால் நான்கு தோல்விகள் நாங்கள் யார் என்பதை வரையறுக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார். 

அரையிறுதிக்கு தகுதிபெற, பாகிஸ்தான் முதலில் வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக எஞ்சிய 3 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளைப் பெற வேண்டும். அவர்களின் நெட் ரன் ரேட்டை மேம்படுத்த அவர்கள் அவற்றை முழுமையாக வெல்ல வேண்டும். அவர்கள் அதைச் செய்ய முடிந்தால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டிகளின் முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று அவர்கள் நம்ப வேண்டும்.

பிராட்பர்ன் ரசிகர்களுக்கு ஒரு நல்ல ஆட்டத்தை வழங்குவதாக உறுதியளித்தார்.

"நாங்கள் இந்த நிலையில் இருக்க விம்பவில்லை. போட்டியின் இந்த கட்டத்தில் நாங்கள் எங்கள் இலக்கை நோக்கியிருக்க வேண்டும். ஆனால் அதில் நாங்கள் இல்லை. அது குழுவை காயப்படுத்துகிறது. இப்போது நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவற்றை கட்டுப்படுத்த வேண்டும். அது எஞ்சியுள்ள 3 விளையாட்டுகளுக்கு நன்றாக தயாராக வேண்டும். விதியும் எங்கள் வசம் இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். ஆனால் நாங்கள் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பினோம் ஆனால் இல்லை என்பதுதான் உண்மை. அது நிச்சயமாக குழுவை காயப்படுத்தியது. மேலும் கடந்த காலப்பகுதியில் நிறைய ஏமாற்றம் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். 

 

IPL_Entry_Point