KKR vs RCB Preview: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டி! ஈடன் கார்டனில் இன்று சிக்ஸர் மழை
ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் போட்டிகளில் ஒன்றாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி உள்ளது. இன்றைய போட்டியில் தங்களது உள்ளூர் மைதானம் பெங்களுருவில் பெற்ற தோல்விக்கு பழிதீர்க்க கொல்கத்தா உள்ளூர் மைதானத்தில் ஆர்சிபி முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஐபிஎல் 2024 தொடரின் 36வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதனத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி தொடங்கு முன் கொல்கத்தா 6 போட்டிகளில் 4 வெற்றியுடன் 3வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு 7 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் முதல் இடத்திலும் இருந்து வருகிறது.
இந்த போட்டி மாலை நேர போட்டியாக 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே பெங்களுருவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே இந்த முறை கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் பழிதீர்க்க வேண்டும் என்ற முனைப்பில் ஆர்சிபி களமிறங்கும்.
எடுப்பான பேட்டிங், எடுபடாத பவுலிங்குடன் ஆர்சிபி
ஆர்சிபி அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. ஆரம்பத்தில் கோலி மட்டும் பேட்டிங் நல்ல பார்மில் இருந்த வந்த நிலையில் தற்போது டூ பிளெசிஸ் தனது பார்மை மீட்டுள்ளார். பினிஷிங்கில் தினேஷ் கார்த்திக் அதிரடியில் மிரட்டி வருகிறார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவிட்டாலும் ராஜத் பட்டிதார் ரன்குவிக்கும் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். எனவே பேட்டிங்கில் எடுப்பாக இருந்தபோதிலும் போதிய அனுபவமின்மை காரணமாக பவுலிங்கில் எடுபடாத அணியாகவே ஆர்சிபி இருந்து வருகிறது. ரீஸ் டாப்லே, லாக்கி பெர்குசன் போன்றோர் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாமலேயே இருந்து வருகிறார்கள். மேக்ஸ்வெல் மோசமான பார்ம் அணியின் ஆல்ரவுண்டர் இருப்பையும் இல்லாமல் செய்துள்ளது.