அவன் பொருள வச்சு அவனையே போட்டு தள்ளிய மொமண்ட்! 12 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்தியா
ஸ்பின் என்ற ஆயுதத்தை வைத்து இந்தியாவை காலி செய்த நியூசிலாந்து முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது. அத்துடன் 70 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் வைத்து நியூசிலாந்து டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 12 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது இந்தியா.

இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெங்களுருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தற்போது இரண்டாவது டெஸ்டையும் வென்று முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது நியூசிலாந்து.
வரலாறு படைத்த நியூசிலாந்து
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆல்அவுட்டான நிலையில், இந்தியாவை முதல் இன்னிங்ஸில் 156 ரன்களில் சுருட்டியது. நியூசிலாந்து ஸ்பின்னர் சாண்ட்னர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து 255 ரன்களில் ஆல் அவுட்டாக, முதல் இன்னிங்ஸில் பெற்ற 103 ரன்கள் முன்னிலையுடன் இந்தியாவுக்கு 359 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.