October Rasi Palan : விருச்சிக ராசிக்குள் நுழையும் சுக்கிரன்.. முருகனுக்கு நெய் தீபம் போடுங்க.. அக்டோபரில் அதிர்ஷ்டம்தா!
October Rasi Palan : உங்கள் வாழ்க்கை சிறப்புற அமைய செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் இருக்கும். முருகன் கோவிலுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றுங்கள். நல்லதே நடைபெறும்.

October Rasi Palan : அக்டோபர் மாத கிரக நிலை என்ன என்பதை பார்க்கலாம். ரிஷப ராசியில் குருபகவானும் மிதுன ராசியில் செவ்வாய் பகவானும் உள்ளனர். இம்மாத ஆரம்பத்தில் சந்திர பகவான் சிம்ம ராசியில் தனது பயணத்தை துவக்குகிறார். கன்னி ராசியில் சூரிய பகவான் புதன் பகவான் கேது பகவான் உள்ளனர். துலாம் ராசியில் சுக்கிர பகவானும் கும்ப ராசியில் சனி பகவானும் மீன ராசியில் ராகு பகவானும் சஞ்சாரம் வருகின்றனர்.
இது போன்ற போட்டோக்கள்
Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?
Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!
Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!
Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
Jun 30, 2025 09:29 AMஇந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும் - வீடு வாங்குவீங்க, தொழிலில் வெற்றி பெறுவீங்க!
Jun 27, 2025 10:06 AMநாளை முதல் இந்த மூன்று ராசிகளும் சக்கரத்தை சுழற்றும்.. மாறப்போகும் அதிர்ஷ்டம்.. நவ பஞ்சமி யோகத்தின் சுப பலன்கள் இதோ!
கிரகப் பெயர்ச்சி
அக்டோபரில் புதன் பகவான் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகின்றார். சுக்கிர பகவான் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகின்றார். அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி இரவு 7 மணி 40 நிமிடத்திற்கு சூரிய பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகின்றார் செவ்வாய் பகவான் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி அன்று மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகின்றார். நீச்ச ஸ்தானத்திற்கு செல்லும் செவ்வாய் பகவானால் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். இம்மாத கடைசியில் அக்டோபர் 29 ஆம் தேதி புதன் பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
அக்டோபரின் விசேஷ நாட்கள்
விசேஷ நாட்கள் என எடுத்துக்கொண்டால் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி மகாளய அமாவாசை வருகின்றது. வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய இந்த அமாவாசையில் பித்துருக்கள் மேலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து நம்மை ஆசீர்வதிக்கக்கூடிய விசேஷமான நாளாகும். அக்டோபர் மூன்றாம் தேதி நவராத்திரி விழா ஆரம்பம். அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி ஆயுத பூஜை என்று சொல்லக்கூடிய சரஸ்வதி பூஜை வருகிறது. அக்டோபர் 12 ஆம் தேதி விஜயதசமி, அக்டோபர் 31 ஆம் தேதி தீப ஒளி திருநாள்.