தீபாவளியில் தொடங்கும் சனி.. குரு ஆசிர்வாதம் வருகிறது.. பணத்தில் புரண்டு விளையாடும் ராசிகள் நீங்கதான்!
Lord Saturn: சனி மற்றும் குரு இருவரும் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். தீபாவளிக்கு பிறகும் இதே நிலையில் இருவரும் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் யோகத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
Mar 27, 2025 11:06 AMவருகிற 29-ம் தேதி அபூர்வ சூரிய கிரகணம்.. இந்த ராசிகளுக்குப் பிரச்னைகள் ஏற்படலாம்.. பண விஷயத்தில் மிக மிக கவனம் தேவை!
Mar 27, 2025 10:27 AMGuru Luck Rasis: கோடி கோடியாக கொட்ட வருகிறாரா குரு?.. பணத்தை அள்ளிக் கொள்ளப் போகும் ராசிகள் நீங்கள் தானா?
Mar 27, 2025 10:22 AMMoney Luck: அள்ளிக் கொடுக்க வருகின்றார் செவ்வாய்.. ஜாக்பாட்டில் சிக்கிய ராசிகள்.. வியாபார வளர்ச்சி யாருக்கு?
நவகிரகங்களில் நீதியின் நாயகனாக விளங்க கூடியவர். சனிபகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்தார்.
அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்ய தொடங்கினார். சனிபகவானும் தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். சனி மற்றும் குரு இருவரும் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். தீபாவளிக்கு பிறகும் இதே நிலையில் இருவரும் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் யோகத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
மகர ராசி
குரு மற்றும் சனி வக்கிர நிலை உங்களுக்கு பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். பொருளாதாரம் நிறைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும்.
மேஷ ராசி
குரு மற்றும் சனி நிலையில் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும். தீபாவளிக்கு பிறகும் நீண்ட நாட்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த குழு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும்.
ரிஷப ராசி
சனி மற்றும் குரு மாற்றத்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
