குரு குறி வைத்துவிட்டார்! இந்த 3 ராசிகளுக்கு பண மழைதான்! 2025 குரு பெயர்ச்சி பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு குறி வைத்துவிட்டார்! இந்த 3 ராசிகளுக்கு பண மழைதான்! 2025 குரு பெயர்ச்சி பலன்கள்!

குரு குறி வைத்துவிட்டார்! இந்த 3 ராசிகளுக்கு பண மழைதான்! 2025 குரு பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil
Published Nov 12, 2024 05:24 PM IST

Guru Peyarchi Palangal 2025: தற்போது சுக்கிரனின் ராசியான ரிஷபம் ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் அடுத்த ஆண்டு மே மாதம் மே 14 இரவு 11:20 மணிக்கு வியாழன் ரிஷப ராசியிலிருந்து வெளியேறி புதன் பகவானின் மிதுன ராசிக்குள் நுழைகிறார்.

குரு குறி வைத்துவிட்டார்! இந்த 3 ராசிகளுக்கு பண மழைதான்! 2025 குரு பெயர்ச்சி பலன்கள்!
குரு குறி வைத்துவிட்டார்! இந்த 3 ராசிகளுக்கு பண மழைதான்! 2025 குரு பெயர்ச்சி பலன்கள்!

இது போன்ற போட்டோக்கள்

தற்போது சுக்கிரனின் ராசியான ரிஷபம் ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் அடுத்த ஆண்டு மே மாதம் மே 14 இரவு 11:20 மணிக்கு வியாழன் ரிஷப ராசியிலிருந்து வெளியேறி புதன் பகவானின் மிதுன ராசிக்குள் நுழைகிறார். 

குரு பகவானின் மிதுன சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பலன் தருவதாகவும், மற்ற ராசிக்காரர்களுக்கு சில நற்பலன்களை தருவதாகவும் இருக்கும். 

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள குரு பெயர்ச்சி ஆனது மங்களகரமான பலன்களை தருவதாக இருக்கும். உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் செயல்களில் உற்சாகம் பிறக்கும். திடீர் பணவரவு மூலம் ஆதாயம் அடைவீர்கள். தடைபட்ட காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். குரு பகவானின் 7ஆம் பார்வையால் கணவன் - மனைவி இடையே மகிழ்ச்சி உண்டாகும். தொழில் கூட்டாளிகளால் லாபம் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். பொருள் வசதியும் செல்வமும் பெருகும். உங்கள் மனைவியுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் குரு பெயர்ச்சி மங்களம் நிறைந்து இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். வருமானத்தில் அபரிமிதமான உயர்வு இருக்கும். நல்ல முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கும். பழைய முதலீடுகளாலும் பணம் வரும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.