Malviya Rajayogam: துலாம் ராசிக்கு செல்லும் சுக்கிரன்! மாளவிய ராஜயோகத்தால் காதல், செல்வத்தில் திளைக்கும் 3 ராசிகள்!
வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று, சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு செல்கிறார். அதன் காரணமாக மாளவ்ய ராஜயோகம் உருவாகும். ஜோதிடத்தில், மாளவ்ய ராஜயோகம் மிகவும் மங்களகரமான பலன்களை தரும் ஒன்றாக கருதப்படுகிறது.

ஜோதிட விதிகளின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு ராசி மற்றும் நட்சத்திர மண்டலத்தை மாற்றுகின்றன. இந்த இடப்பெயர்ச்சி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. ஜோதிடத்தை பொறுத்தவரை சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆடம்பர வாழ்க்கைக்கு காரணியாக கருதப்படுகிறார். அசுர குரு என்று அழைக்கப்படும் சுக்கிர பகவான் அழகு, ஆடம்பரம், திருமண வாழ்கை உள்ளிட்டவை சிறக்க காரணமாக அமைகிறார்.
இது போன்ற போட்டோக்கள்
May 18, 2025 05:46 PMகுரு+ராகு கேது பெயர்ச்சி: ரிஷபம் முதல் மகரம் வரை…! கோடிகளை குவிக்க போகும் 6 ராசிகள்!
May 18, 2025 04:12 PMசிம்ம ராசியில் செவ்வாய் சஞ்சாரம்.. கவலைகள், பிரச்னைகள் நீங்கி செல்வத்தை பெறப்போகும் ராசிகள்
May 18, 2025 01:52 PMஎதிர்காலத்தை பிரதிபலிக்கும் கனவுகள்.. இந்த விஷயங்கள் கனவில் வருகிறதா? இனி உங்கள் விதி மாறி அதிர்ஷ்ட மழை பொழிவுதான்
May 18, 2025 05:30 AMஇன்று நாள் எப்படி இருக்கும்? அதிர்ஷ்டத்தின் உதவி யாருக்கு கிடைக்கும்? மே 18 ஆம் தேதிக்கான பலன்கள் இதோ!
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
செழிப்பை கொண்டு வரும் சுக்கிர பகவான்
சுக்கிரனின் சுப பலன் ஒரு நபரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை கொண்டுவருவதாக நம்பப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அன்று, சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு செல்கிறார். அதன் காரணமாக மாளவ்ய ராஜயோகம் உருவாகும். ஜோதிடத்தில், மாளவ்ய ராஜயோகம் மிகவும் மங்களகரமான பலன்களை தரும் ஒன்றாக கருதப்படுகிறது. அதன் நல்ல பலன் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவரும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
மாளவ்ய ராஜயோகம் என்றால் என்ன?
ஜாதகத்தில் மாளவ்ய ராஜயோகம் அமைவதால் மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை ஆக உள்ளது. இது பஞ்ச மகாபுருஷ் யோகம் என்றும் அழைக்கப்படுகின்றது. சுக்கிரன் மூலம் உருவாகும் இந்த யோகம் ஆனது சரியாக வேலை செய்தால் ஒருவரது வாழ்க்கையில் பணத்துக்கு பஞ்சம் இருக்காது. ஆன்மிகச் செயல்களில் ஆர்வம் அதிகரித்து வாழ்க்கை சுகபோகங்க செயல்களில் கழியும்.