தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  On Cam: Brave Jeweller Fights Gun-toting Robbers With Iron Rod In Mumbai

Robbery in Mumbai: நகைகடையில் துப்பாக்கி காட்டி மிரட்டல் - இரும்பு கம்பியை வைத்து தப்பித்த நபர்

May 30, 2023 11:19 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 30, 2023 11:19 PM IST
  • மும்பையில் துப்பாக்கியுடன் நகை கடை ஒன்றில் புகுந்து கொள்ள அடிக்க முயற்சித்தவரை, கடையின் உரிமையாளர் இரும்பு கம்பியால் தாக்கி தப்பித்த சம்பவத்தின் பதைபதைக்கும் விடியோ காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது. மும்பை மிரா சாலையில் மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மாஸ்க் அணிந்த இருவர் முதுகில் கருப்பு பேக் ஒன்றை மாட்டிக்கொண்டு கோதாரி என்கிற நகை கடைக்குள் நுழைந்துள்ளனர். அப்போது கடையின் உள்ள மோஹித் என்ற நபர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். மோதிரம் வாங்குவது போல் கூறி, டிசைன்களை காட்ட சொல்லியுள்ளனர் கடைக்கு வந்திருந்த முகமுடி அணிந்த நபர்கள். பின் கண் இமைக்கும் நொடியில் முகமுடி நபர்களில் ஒருவர் தனது கையில் துப்பாக்கியை எடுத்து கடையில் இருந்த நபரை மிரட்டியுள்ளார். அத்துடன் அவரை பிடித்து தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து தனது கையில் இரும்பி கம்பி ஒன்றை எடுத்த கடைக்காரர் முகமுடி நபர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். துப்பாக்கியை காட்டி மிரட்டியபோதும் அஞ்சாத கடைக்காரர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட முயற்சித்துள்ளார். முகமுடி நபர்களின் பிடியிலிருந்து தப்பித்த மோஹித் அலாரத்தை அடிக்க, உடனடியாக கொள்ளை முயற்சி செய்தவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
More