Biryani Festival:ஒரு கிலோ பிரியாணி கோழிக்கறியை 10 நிமிடத்தில் சாப்பிட்ட இளைஞர்!
பத்து நிமிடத்தில் ஒரு கிலோ கோழி பிரியாணி மற்றும் கோழிக்கறியில் சாப்பிட்டு இளைஞர் பரிசு வென்றார்.
தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் நாயக்கன்பட்டி கிராமத்தில் நேற்று காணும் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்று பலவிதமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதில் ஒரு பகுதியாக மருமகள் மாமியார் கயிறு இழுக்கும் போட்டி போன்றவை நடந்தன இதில் பெண்கள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் பலவிதமான போட்டிகள் நடைபெற்றன அதில் குறிப்பாக பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது.
அதாவது ஒரு கிலோ சில்லி சிக்கன் மற்றும் ஒரு கிலோ பிரியாணி சாப்பிடும் சாப்பாட்டு ராமன் போட்டி நடைபெற்றது. இது கலந்து கொண்ட அனைவரும் ஜெயிக்கவில்லை என்றாலும் இதுதான் வாய்ப்பு என பிரியாணியும், சில்லி சிக்கனையும் வெளுத்து வாங்கினார்கள்.
இந்த போட்டியில் 10 நிமிடத்தில் வெற்றிவேல் என்னும் இளைஞர் ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிட்டு போட்டியில் வெற்றி அடைந்தார். பிரியாணி சாப்பிடும் போட்டியில் கஜேந்திரன் என்பவர் பிரியாணியை சாப்பிட்டு வெற்றி பெற்றார். ஏழு நிமிடத்தில் அரை கிலோ ஐஸ்கிரீமை ராஜ்குமார் என்பவர் சாப்பிட்டு வெற்றி பெற்றார்.
இங்கு மட்டுமல்லாது அனைத்து ஊர்களிலும் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. கிராமப்புறங்களில் பொதுவாக காணும் பொங்கல் தினத்தன்று ஊர் மக்கள் ஒன்று கூடி விளையாட்டு போட்டிகள் நடத்தி விளையாடுவது வழக்கமான ஒன்றாகும்.
டாபிக்ஸ்