Fact Check : 'மு.க.ஸ்டாலின் பார்த்ததால் சிஎஸ்கே தோல்வி’ என வைரலாகும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா? உண்மை என்ன?
Fact Check : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் ஐபிஎல் போட்டியை பார்த்தது தான் தோல்விக்குக் காரணம் என்பது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் நடந்தது என்ன?

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்ச் பார்க்க வந்ததுதான் காரணம் என்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் ஐபிஎல் போட்டியைக் காணும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “#CSK எப்போ எங்க தோத்தது தெரியுமா ? பீடை…பீடை…..பீடை…. குடும்பம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை சிஎஸ்கே இழந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் இந்த போட்டியை பார்த்தது தான் தோல்விக்குக் காரணம் என்பது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.