TOP 10 NEWS: ’நாளை கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்! அதிமுக உண்ணாவிரதம்! திமுகவை விளாசும் ராமதாஸ்!’ டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: நாளை கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல், குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சி ரத்து, ஓபிஎஸ் மீதான வழக்குக்கு தடை, யானை தந்த சிலைகள் பறிமுதல், தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம், திருப்பூரில் அதிமுக உண்ணாவிரதம்!

TOP 10 NEWS: ’நாளை கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்! அதிமுக உண்ணாவிரதம்! திமுகவை விளாசும் ராமதாஸ்!’ டாப் 10 நியூஸ்!
1.நாளை கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல், நாளை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும். ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் பேட்டி.
2.குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சி ரத்து
ஃபெஞ்சல் புயல் காரணமாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் திருவாரூர் வருகை ரத்து.திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் தலைமையேற்று பட்டங்களை வழங்க இருந்தார்.
3.அடுத்த 3 நாட்களுக்கு மழை எச்சரிக்கை
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். சென்னை புறநகர் பகுதியில் நாளை ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி.