TOP 10 NEWS: தமிழ அரசை சாடும் ஈபிஎஸ்! தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! பருவமழை ஆய்வில் உதயநிதி! இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து உதயநிதி பேட்டி, தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை, தமிழக அரசு மீது அதிமுக விமர்சனம், ஈபிஎஸ்க்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கண்டனம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: தமிழ அரசை சாடும் ஈபிஎஸ்! தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! பருவமழை ஆய்வில் உதயநிதி! இன்றைய டாப் 10 நியூஸ்!
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
1.துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு அடையாமல் இருந்தால் அதை சுற்றி வேலை அமைக்க வேண்டும். மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வெளி மாவட்ட ஆட்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். மழை நேரத்தில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டு மக்களை காக்கும் பணியில் ஈடுபடுவோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
2.கலைஞர் பன்னாட்டு அரங்க கட்டுமானம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் 487 கோடி செலவில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் பன்னாட்டு அரங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரியது.