Top 10 Tamil Nadu: உதயநிதியை பதவி விலக சொல்லும் பாஜக முதல் குப்பை கொட்டினால் ஏஐ வரை!இன்றைய டாப் 10!
தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 25) இரவு வரை நிகழ்ந்துள்ள நிகழ்வுகளின் டாப் 10 செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

மீண்டும் வெடித்த தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு பயிற்சி திட்டம் சார்பாக இன்று நடத்தப்பட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது என சர்ச்சை எழுந்துள்ளது. உதயநிதி கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு உதயநிதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மைக் நின்று விட்டதனால் இந்த தவறு நடந்ததாக விளக்கம் அளித்துள்ளார். இதில் “சீராரும் வதனம் என திகழ்பெருத கண்டமிதில்” என்றும் வரியில் கண்டமதில் என மாற்றிப் பாடியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
பதவி விலகுவாரா உதயநிதி: அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதை அடுத்து தமிழகத்தை சேர்ந்த பாஜகவினர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஒன்றிய அமைச்சர் எல் முருகன் அவரது X பதிவில் ஆளுநர் ஆர்.என் ரவி நீ கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு அவரையே குற்றம் சாட்டினார். தற்போது உதயநிதி கலந்து கொண்ட விழாவில் இவ்வாறு தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதால் உதயநிதி பதவி விலகுவாரா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் இந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து உதயநிதி பதவி விலகுவாரா என தனது எக்ஸ் தள பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
புயலுக்கு பின் மழை: அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த தானா புயல் இன்று கரையை கடந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழை அல்லது அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.