Crime : சென்னையில் கொடூரம்.. வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய தம்பி.. அக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசார் தீவிர விசாரணை!
சென்னை திருவொற்றியூரில் தாய் தம்பியை கொலை செய்து விட்டு உறவினர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொடூரம்.. வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய தம்பி.. அக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசார் தீவிர விசாரணை!
சென்னை திருவொற்றியூரில் தாய் தம்பியை கொன்றுவிட்டு கடற்கரையில் பதுங்கியிருந்த கொலையாளியை போலீசார் கைது செய்தனர். இரட்டை கொலை செய்து விட்டு உறவினர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார் கொலையாளி.
தப்பி ஓடி கடற்கரையில் படகில் உறங்கிக் கொண்டிருந்த கொலையாளியை துணை ஆணையர் பணி படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
தாய் தம்பியை கொன்ற மகன்
சென்னை திருவொற்றியூர் திருநகர் சேர்ந்தவர் பத்மா(45). அக்குபஞ்சர் மருத்துவரர் ஆவர். இவரின் கணவர் முருகன் ஓமன் நாட்டில் டிரைவராக பணியாற்றி வருகிறார். தனியார் கல்லூரியில் மூத்த மகனான நித்திஷ் பிஎஸ்சி படித்து வருகிறார். இவரின் இரண்டாவது மகன் சஞ்சய் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.